பகுதி:2 ஒய்வு நாள் ஆசரிப்பு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?
ஏழாம் ஓய்வுநாள் வருகை சபையாருடைய போதகங்களை குறித்து படித்து கொண்டு வருகிறோம்
இந்த ஏழாம் ஓய்வு நாள் வருகை சபை எல்லன் ஜி வைட்,ஜேம்ஸ் வைட் ஜோசப் பேட்ஸ்,J.N ஆண்ட்ருஸ் இவர்கள் மூலமாக தான் கி.பி 1863 ம் ஆண்டு மே 23ம் தேதி பாட்டில் கிரீக் என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது
இவர்கள் யெகோவா சாட்சிகளை போல உலகமெங்கும் பரம்பி இருக்கிறார்கள்,இவர்கள் தங்களுடைய கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் போன்றவைகள் மூலமாக நற்கிரியைகளை செய்து தங்களுடைய உபதேசங்களையும் போதித்து வருகிறார்கள்
நாங்கள் மோசேயின் பிரமாணத்தை கடைபிடிக்கவில்லை பத்து கற்பனைகளை தான் கடைபிடிக்கிறோம் என்று சொல்லுவார்கள் ஆனால் மோசேயின் பிரமாணத்தில் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற பிரமாணத்தை பின்பற்றுவார்கள்
காபி டீ குடிக்க மாட்டார்கள் வெள்ளை சர்க்கரை பயன்படுத்த மாட்டார்கள் வெஜிடேபுள் உணவுகளை மாத்திரம் சாப்பிட வேண்டும் என்று தங்கள் சபையாருக்கு போதித்து வருகிறார்கள்
இவர்கள் தங்கள் சபையாருக்கு சில மாம்ச உணவுகளையும் சாப்பிடக் கூடாது என்று தடை செய்து இருக்கிறார்கள்
இவர்கள் விருத்தசேதனம் இல்லாத நியாயப்பிரமாணத்தை கடை பிடிக்கிற பழைய ஏற்பாட்டு பரிசேயர்கள்
ஓய்வுநாள் பிரமாணத்தில் உள்ளடக்கமான பிரமாணங்கள் நிறைய இருக்கிறது ஆனால் அதை பற்றி கேட்டால் அது மோசேயின் பிரமாணம் அதை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பார்கள்
கீழே உள்ள கட்டளைகளை எல்லாம் ஏழாம் ஒய்வுநாள் வருகை சபையார் ஆசாரிக்கிறார்களா?
ஒய்வு நாட்களில் எத்தனை பிரிவுகள் இருக்கிறது?
1) வாரத்தின் ஏழாம் நாள் நாட்களின் ஒய்வு
2) 7x7= 49ம் நாள் முடிந்து 50ம் நாள் (பெந்தெகொஸ்தே நாள்) வாரங்களின் முடிவு
3) ஆறுவருடம் முடிந்து ஏழாம் வருடம் (ஒரு வருடம் முழுவதும்) வருஷங்களின் ஒய்வு
4) 7x7=49 வருடங்கள் முடிந்து 50வது வருடம் யூபிலி வருஷ ஒய்வு
ஒய்வு நாளில் செய்ய வேண்டிய கட்டளைகள்
1) ஒய்வு நாளில் 12 அப்பங்களை பரிசுத்த மேஜையில் இரண்டு அடுக்காக அடுக்கி வைக்க வேண்டும் (லேவி 24:5-8, 1நாளா 9:32)
2) சர்வாங்க தகனபலி செலுத்த வேண்டும் ( எண் 28:10, 2நாளா 8:13, 31:9)
3) விருத்தசேதனம் பண்ணுவார்கள் ( யோவா 7:22,23)
4) மோசேயின் ஆகமங்களை ஒய்வுநாளில் வாசிப்பார்கள்(அப் 15:21,27)
ஒய்வு நாளில் என்ன செய்யக் கூடாது என்று தேவன் கட்டளைகளை கொடுத்து இருக்கிறார்?
1) விறகு பொறுக்கக்கூடாது (எண் 15:32-36)
2) அடுப்பில் நெருப்பு மூட்டக்கூடாது (யாத் 16:22,23)
3) சொந்த பேச்சை பேசக்கூடாது (ஏசா 58:13, 56:2,6-8)
4) வேலை செய்யக்கூடாது (யாத் 31:12-16)
5) விதைக்கவோ அறுக்கவோ கூடாது (யாத் 34:21)
6) சுமையை வெளியே கொண்டு போகவோ உள்ளே கொண்டு வரவோ கூடாது(எரே 17:20-23, நெகே 13:19,20)
7) சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தான் நடக்க வேண்டும்(அப் 1;12)
இந்த பிரமாணம் எங்களுக்கு இல்லை அது இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது என்பார்கள்
இவர்கள் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும் என்ற பிரமாணத்தை மாத்திரம் எடுத்துக் கொள்வார்கள் புதிய ஏற்பாட்டு உபதேசத்திற்கு போய் சபை ஓய்வு நாளில் தான் கூடி வரவேண்டும் என்று போதிப்பர்கள்
ஓய்வுநாளை ஆசரிக்க கூடிய இஸ்ரவேல் ஜனங்களுக்கு சிறப்பான ஆசீர்வாதத்தை தேவன் கொடுத்து இருந்தார்
1) கர்த்தர் ஆறாம் நாளில் இரண்டு நாளுக்கும் சேர்த்து போஜனம் கொடுத்தார் (யாத் 16:29,30)
2) வருஷங்களில் ஒய்வுகளில் மூன்று வருஷத்துக்கான பலனை ஆறாம் வருஷத்திலே கொடுத்து விடுவார் (லேவி 25:20-22)
ஒய்வு வருஷத்தில் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்
1) 7ம் வருஷம் அடிமையை விட்டு விட வேண்டும் (யாத் 21:1-6)
2) 7ம் வருஷத்தில் நிலத்தை தரிசாக விட்டுவேண்டும் (லேவி 25:1-7)
யூபிலி வருஷ ஒய்வு வருடத்தில் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்
1) தன்தன் காணியாட்சிக்கும் தன்தன் குடும்பத்துக்கும் திரும்பி போக வேண்டும் (லேவி 25:8-10)
2) அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை புசிக்க வேண்டும் (லேவி 25:11-13)
3) எக்களாம் ஊதி தெரியப்படுத்த வேண்டும் (லேவி 25:8-28,50,52)
இந்த ஒய்வுநாளை தேவன் யாருக்கு தான் கட்டளையிட்டார்?
இஸ்ரவேல் ஜனங்களுக்கு மாத்திரம் தேவன் அதை கட்டளையிட்டார் அது இஸ்ரவேலுக்கு தேச சட்டமாக இருந்தது
உபா 5:15 நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.
யாத் 20:9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
யாத் 20:10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
யாத் 34:21 ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம் நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக.
யாத் 16:29 பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.
யாத் 16:30 அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
யாத் 31:13 நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
யாத் 31:14 ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
ஒய்வுநாள் பிரமாணத்தை தேவன் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கவில்லை அந்த பிரமாணத்தை தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிட்டார்
ஆனால் ஓய்வு நாள் ஆசரிப்பு சபையார் இதையெல்லாம் ஒருபோதும் ஏற்றுக்
கொள்ளமாட்டார்கள்
கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து ஓய்வுநாள் சபையாரின் உபதேசங்களை குறித்தும் இன்னும் கற்றுக் கொள்ளுவோம்