பகுதி:3 ஒய்வு நாள் ஆசரிப்பு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?
ஒய்வு நாள் ஆசரிப்பு பிரமாணம் நியாயப்பிரமாணத்தில் ஒரு பாகமாக இருக்கிறதா?
ஓய்வு நாள் ஆசரிப்பு பிரமாணத்தை குறித்து நாம் கற்றுக் கொண்டு வருகிறோம்
அந்தப் பிரமாணம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது என்பதை வசன ஆதாரத்தோடு கற்று இருக்கிறோம்
இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை சிலுவையில் குலைத்து போட்டார்
கொலோ 2:14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
கொலோ 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்
கொலோ 2:16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
ஆனால் இந்த ஓய்வு நாள் ஆசரிப்பு சபையார் பத்து கற்பனைகளை இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையவில்லை மோசேயின் பிரமாணங்களை தான் சிலுவையில் அறைந்தார் என்று வாதம் செய்வார்கள்
கொலோசெயர் 3ம்அதிகாரம் 16ம் வசனத்தில் இருக்கிற ஓய்வுநாள் என்பது மோசேயின் பிரமாணத்தில் கொடுக்கப்பட்ட ஓய்வுநாளைக் குறித்த சட்ட திட்டங்கள் அதைத்தான் இயேசுகிறிஸ்து சிலுவையில் அறைந்தார் என்பார்கள்
அவர்களிடத்தில் பத்து கட்டளைகளில் உள்ள ஓய்வு நாளை எப்படி ஆசாரிப்பீர்கள் என்று கேட்டால் மோசேயின் பிரமாணத்தில் உள்ள கட்டளைகளை காண்பித்து இப்படி தான் ஆசாரிக்க வேண்டும் என்பார்கள்
அதை தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைத்து விட்டாரே என்று கேட்டால் அவர்களுக்கு கோபம் வந்து நம்மை பரியாசம் பண்ணுவதை போல பேச ஆரம்பித்து விடுவார்கள்
இவர்கள் யூதர்களை போல ஏழாம் நாளில் கூடுவார்கள் அங்கு என்ன செய்வார்கள் என்றால் புதிய ஏற்பாட்டையும் பழைய ஏற்பாட்டையும் கலந்து போதித்து கொண்டு இருப்பார்கள்
பத்து கற்பனையும் மோசேயின் நியாயப்பிரமணத்தில் உள்ளடக்கமாகத்தான் இருக்கிறது என்பதை இதற்கு பின் வரும் சத்தியங்களில் வசன ஆதாரத்தோடு நாம் கற்று கற்று கொள்ளுவோம்
இவர்களுடைய பெரும்பாலான உபதேசம் ஓய்வு நாளைப் பற்றி தான் இருக்கும்
நியாயப்பிரமாணத்தின் சட்டத் திட்டங்களைக் குறித்து புதிய ஏற்பாடு நமக்கு என்ன போதிக்கிறது?
1) அது நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்க முடியாது நுகம் (அப் 15:5-10)
2) நியாயப்பிரமாணம் மனிதனுக்கு மரணத்தை கொண்டு வந்தது
(ரோம 7:9,10)
3) நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்துக்குட்பட்டு இருக்கிறார்கள் (கலா 3:9,10)
4) சிலுவைக்கு பின்பு நியாயப்பிரமாணத்தினால் யாரும் நீதிமானாக முடியாது (கலா 2:16, 3:11, ரோம 3:20)
5) நியாயப்பிரமாணத்தில் நீதிமான்களாக யாவரும் கிறிஸ்துவை விட்டு பிரிந்து கிருபையிலிருந்து விழுவார்கள் (கலா 5:4)
6) கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார் (ரோம 10:3,4)
7) கிறிஸ்து நமக்காக சாபமாகி நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார் (கலா 3:13, உபா 21:23)
8) நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குட்படாமல், கிறிஸ்து நமக்காக உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள் (கலா 5:1)
9) ஆவியினால் நடத்தப்படுவீர்களானால் நீங்கள் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்கள் அல்ல (கலா 5:18)
நியாயப்பிரமாணத்தை போதிக்கிறவர்கள் கள்ளச் சகோதரர்களாக இருக்கிறார்கள்
கலா 2:4 கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.
அப்போஸ்தலர்கள் அந்த உபதேசத்திற்கு செவி கொடுக்கவும் இல்லை அவர்களுக்கு கீழ்ப்படியவும் இல்லை
கலா 2:5 சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
நியாயப்பிரமாணத்தை போதிக்கிறவர்கள் ஆத்துமாக்களை புரட்டுகிறார்கள்
அப் 15:24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,
நியாயப்பிரமாணம் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் மாத்திரம் இருந்தது
கலா 3:23 ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.
கலா 3:24 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
கலா 3:25 விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.
இப்படிப்பட்ட உபதேசங்கள் கிறிஸ்துவைப் பற்றினது அல்ல
கொலோ 2:8 லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.
நியாயப்பிரமாணம் யாருக்கு விதிக்கப்பட்டது?
1தீமோ 1:9 எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,
1தீமோ 1:10 வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
1தீமோ 1:11 நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.
கிறிஸ்துவின் ஆவியின் பிரமாணம் இந்த நியாயப்பிரமாணத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி இருக்கிறது
ரோம 8:2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
இப்படி நியாயப்பிரமாணத்தை போதிக்கிறவர்கள் தங்களுக்கேற்ற ஆக்கினையை அடைவார்கள்
கலா 5:10 நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்களென்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்; உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான்.
இப்படிப்பட்டப்பட்டவர்கள் தறிப்புண்டு போனால் நலமாய் இருக்கும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுவதை கவனியுங்கள்
கலா 5:11 சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.
கலா 5:12 உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும்.
தொடர்ந்து ஏழாம் ஒய்வுநாளைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்
Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்
No comments:
Post a Comment