பாடம் :12 ஓய்வு நாள்
பிரமாண உபதேசங்கள்
ஓய்வுநாளை ஆசரிக்கிறவர்களின் உபதேசம் இது தான்
1) தேவன்
எழுதிய பத்து கற்பனைகள் தேவனுடைய நியாயப்பிரமாணம்
2) மோசே
எழுதிய மற்ற எல்லா பிரமாணங்களும்
மோசேயினுடைய நியாயப்பிரமாணம் என்கிறார்கள்
பத்து கட்டளைகளை தேவன் தம்முடைய கையால் எழுதி கொடுத்தார் அது
தேவனுடைய நியாயப்பிரமாணம் அதை கிறிஸ்து சிலுவையில் குலைத்துப் போடவில்லை என்கிறார்கள்
அது உண்மையா?
Exo 24:12 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.
தேவன் முதலில் பத்துக்கற்பனைகளை அவரே
எழுதி அதை மோசேயினிடத்தில் கொடுத்தார்
Exo 31:18 சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.
Deu 9:9 கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.
Deu 9:10 அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.
Deu 5:22 இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்.
ஆனால் அந்த பத்து கற்பனைகளை இஸ்ரவேல் ஜனங்கள் மேல்
உள்ள கோபத்தில் மோசே அதை உடைத்துப் போட்டார்
Deu 9:11 இரவும் பகலும் நாற்பதுநாள் முடிந்து, கர்த்தர் எனக்கு அந்த உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறபோது,
Deu 9:12 கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாய் இவ்விடம் விட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்.
Deu 9:15 அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளில் இருந்தது.
Deu 9:16 நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்.
Deu 9:17 அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் ஓங்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன்.
மறுபடியும்
தேவன் கற்பலகைகளை எழுதுவதற்கு மோசேயுடம் கற்பலகைகளை இழைத்துக் கொண்டு வர சொன்னார்
Exo 34:1 கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.
Exo 34:4 அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான்.
Deu 10:1 அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.
Deu 10:2 நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.
மோசே கொண்டு போன கற்பலகைளில் தேவன் மறுபடியும் அந்த
பத்துக் கற்பனைகளை எழுதி கொடுத்தார்
Deu 10:3 அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன்.
Deu 10:4 முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக் கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்த பிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.
Deu 10:5 அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது.
ஆனால்
பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளை மோசே தான் பலகைகளில் எழுதினார்
Exo 34:28 அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
இரண்டாவது முறையாக பத்துக்கட்டளையை எழுதியது தேவனா அல்லது மோசேயா?
Exo 34:1 கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.
Exo 34:28 அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
- மோசே பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளை பலகைகளில் எழுதினாலும் அது தேவனுடைய அதிகாரத்தின்படி எழுதப்பட்டபடியினாலே அது தேவனுடைய பிரமாணம் என்று தான் அழைக்கப்படுகிறது
- அதே போல மோசேயினாலும் எழுதப்பட்ட எந்த பிரமாணமும் தேவனிடத்திலிருந்து தான் வந்து இருக்கிறது
உதாரணம் ஒன்றை கவனியுங்கள்
இயேசு கிறிஸ்து இங்கே ஞானஸ்நானம் கொடுத்ததாக வேத வாக்கியங்கள்
போதிக்கிறது
Joh 4:1 யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,
அப்படியென்றால் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் கொடுத்தாரா?
இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் கொடுக்கவில்லை
அப்படியென்றால் யார் ஞானஸ்நானம் கொடுத்தது?
இயேசு கிறிஸ்து ஞானஸ்நானங் கொடுக்கவில்லை அவருடைய சீஷர்கள் ஞானஸ்நானம்
கொடுத்தார்கள்
Joh 4:3 இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.
- இயேசுவின் சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுத்தாலும் அது அவருடைய அதிகாரத்தின்படி செய்யப்படுகிறபடியினால் அது இயேசு கொடுத்த ஞானஸ்நானம் என்று தான் வேத வாக்கியங்கள் போதிக்கிறது
இயேசு கிறிஸ்து
சிலுவையில் குலைத்துப் போட்டது எந்த பிரமாணத்தை?
Col 2:14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
Col 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
இங்கே சொல்லப்பட்டது மோசேயின் பிரமாணம் என்றால் இந்த
வசனத்தில் ஏன் ஓய்வுநாளை குறித்தாவது ஒருவனும் உங்களை குற்றப்படுத்த வேண்டாம்
என்கிறார்?
Col 2:16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
Col 2:17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
ஆனால் இங்கே சொல்லப்பட்டு இருக்கிற பலிகளும் ஓய்வுநாட்களும்
பண்டிகைகளும் கர்த்தருடைய நியாயப்பிரமாணம் என்று தான் அழைக்கப்பட்டு இருக்கிறது
2Ch 31:3 ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான்.
- கொலேசெயர் 2:15-17 வசனத்தில் பண்டிகை நாளும் மாதப்பிறப்புகளும் போஜனபலியும் பானபலியும் ஓய்வுநாட்களும் சிலுவையில் குலைத்துப் போடப்பட்டு இருக்கிறது
- போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் குறித்தாவது ஒருவனும் நம்மை குற்றப்படுத்த முடியாது என்றால் ஓய்வுநாட்களையுங் குறித்தும் ஒருவனும் நம்மை குற்றப்படுத்த முடியாது
- மோசேயின் பிரமாணம் என்றாலும் கர்த்தருடைய பிரமாணம்(அல்லது) தேவனுடைய பிரமாணம் என்றாலும் மூன்றும் ஒன்று தான், சிலுவையில் குலைத்துப் போடப்பட்டதும் இது தான்
கர்த்தருக்கு சித்தமானால்
தொடரும்
No comments:
Post a Comment