Thursday, 30 June 2022

ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரண நாள் ஏன் நல்லதாக இருக்கிறது?

பாடம் :02 சரீரப் பிரகாரமான மரணம்

ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும்  மரண நாள் ஏன் நல்லதாக இருக்கிறது?

எல்லா மனுஷர்களுக்கும் நியமிக்கப்பட்டு இருக்கிற மரணத்தை குறித்து நாம் கற்றுக் கொண்டு வருகிறோம் 

மரணத்தைக் குறித்து வேத வாக்கியம் என்ன போதிக்கிறது என்பதையும்  கற்றுக் கொண்டு இருக்கிறோம் 

தேவன் தாயின் கர்ப்பத்தில் நம்மை பிரமிக்கதக்க அதிசயமாக உண்டாக்கினாலும் தேவன் நம்மை மண்ணென்று தான் என்று நினைவு கூறுகிறார்
சங் 139:14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.
சங் 103:14 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்

நாம் மண்ணாய்  இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்

நம்முடைய சரீரம் மண்ணாய் இருக்கிறபடியால் அது மண்ணுக்கு திரும்புகிறது
பிர 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

நம்முடைய மரணத்தைக் குறித்து தேவன் என்ன சொல்கிறார்?

மனுஷனுக்கு எது நல்லதென்று தேவன் சொல்லுகிறார் என்பதை கவனியுங்கள்
பிர 7:1 பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது.

மனுஷனுக்கு பிறந்த நாளா அல்லது மரணநாளா எது நல்ல நாளாக இருக்கிறது?

அநேகர் பிறந்த நாளை மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் அதை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்

அதோடு மாத்திரம் அல்ல இன்றைக்கு அநேகர் தங்களுடைய  பிறந்தநாளுக்கு வாழ்த்துதல் சொல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள்

அப்படி வாழ்த்துதல் சொல்லுவதினாலே அவர்களுக்கு கிடைக்கும் மேன்மை என்ன?

நாம் இன்றைக்கு பிறந்த நாளை நல்ல நாள் என்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம் ஆனால் நம்முடைய மரண நாள் தான் நல்லது என்று தேவன் சொல்லுகிறார்

பிறந்த நாளை நீங்கள் வருஷந்தோறும் அநுசரித்தல் அதினால் உங்களுக்கு இலாபம் என்ன?

அப்படி நீங்கள் கொண்டாடுவதினால்  ஆவிக்குரிய வாழ்க்கையில் அது உங்களுக்கு என்ன பிரயோஜனத்தை கொடுக்கிறது?

நீங்கள் இருக்கிறவரைக்கும் உங்கள் பிறந்த நாளை கொண்டாடுவீர்கள் உங்களுடைய மரணத்திற்கு பிறகு அந்த நாளைக் குறித்து யார் சிந்திப்பார்கள்?

உங்களுடைய ஒவ்வொரு பிறந்தநாளும் வருகின்ற பொழுது  உங்களுடைய கல்லறையை நோக்கி நீங்கள் ஒரு அடி எடுத்து வைக்கிறீர்கள்

நம்முடைய மரணத்திற்கு பிறகு இந்த பூமியிலே நமக்கு என்ன பங்கு இருக்கிறது?
பிர 9:4 இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.
பிர 9:5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
பிர 9:6 அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை

நீங்கள் இந்த பூமியில் சிங்கமாக வாழ்ந்தாலும் மரித்த பின் உங்களைப் பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசியாக இருக்கிறது

நீங்கள் மரித்த பின் உங்களுடைய சிநேகமும் பகையும் பொறாமையும் எல்லாம் ஒழிந்து விடும் 

உங்களுடைய பேர் முதலாய் இங்கே மறக்கப்பட்டு போகும்

இந்த பூமியில்  நாம் பாடுபடும்படி தேவன் நமக்கு தொல்லைகளை நியமித்து இருக்கிறார்
பிர 3:9 வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?
பிர 3:10 மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.

நாம் விருந்து வீட்டுக்கு போவதா அல்லது துக்கவீட்டுக்கு போவதா எது நல்லது என்று தேவன் நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார்
பிர 7:2 விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.

நாம் துக்கவீட்டுக்கு ஏன் போவது நலமாய் இருக்கும்? ஏனென்றால் எல்லா மனுஷரின் முடிவு அங்கே காணப்படும் நாம் இதை தான சிந்திக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் 

அங்கே நாம் என்ன முடிவை பார்க்கிறோம்?
பிர 2:14 ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரே விதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.
பிர 2:15 மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
பிர 2:16 மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.

மரிக்கிற விசயத்தில் மனுஷனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
பிர 3:19 மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.
பிர 3:20 எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

மனுஷனுடைய ஆவி உயரேயும் மிருகங்களுடைய தாழப் பூமியிலேயும் இறங்குகிறது
பிர 3:21 உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?

மரத்தைக் குறித்து நம்பிக்கை இருக்கிறது ஆனால் மனுஷனைக் குறித்து என்ன நம்பிக்கை இருக்கிறது?
யோபு 14:7 ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;
யோபு 14:8 அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,
யோபு 14:9 தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும்.
யோபு 14:10 மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?

மரத்தை குறித்து துளிர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது ஆனால் மனுஷனைக் குறித்து என்ன நம்பிக்கை இருக்கிறது?

நாம் இந்த பூமியில் இருக்கிற வரைக்கும் எல்லா வருத்தங்களும் கஷ்டங்களும் போராட்டங்களுக்கும் நமக்கு  இருக்கிறது
வெளி 21:4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
பிர 5:17 அவன் தன் நாட்களிலெல்லாம் இருளிலே புசித்து, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான்.

தேவனுடைய பிள்ளைகளுக்கு ஏன் மரணநாள் நல்ல நாளாக இருக்கிறது?

மேலே சொல்லப்பட்ட கண்ணீர், மரணம், துக்கம், அலறுதல், வருத்தம் எல்லாம் ஒழிந்து போய் விடும்

நம்முடைய மரணம் நம்முடைய வீட்டாருக்கு துக்கமான நாளாக இருக்கிறது ஆனால் அந்த நாள் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நாள்

அந்த நாள் ஏன் நமக்கு சந்தோஷமான நாளாக இருக்கிறது?

இந்த பூமியிலே தேவன் நமக்கு கொடுத்த கிரியை எல்லாம் முடித்து மரிக்கின்ற போது நாம் இளைப்பாறுதலில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை பெறுகிறோம்
எபி 4:10 ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.

இயேசு கிறிஸ்து பிதாவின் கிரியைகளை எல்லாம் செய்து முடித்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்
யோவா 17:4 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.

நாம் நம்முடைய கிரியை எல்லாம் முடித்து மரித்த பிறகு தான் நாம் ஆபிரகாமின் மடியில் இளைப்பாற முடியும்
லூக் 16:22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.

நாம் கிறிஸ்துவின் எல்லா பிரமாணத்திற்கும் கீழ்படிவோம் என்றால் நம்முடைய மரணத்திற்கு பிறகு நாம் பரதீசியில் தேற்றப்படுவோம்
லூக் 16:25 அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்

கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் மரணத்தைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம் 

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற  9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்

Friday, 24 June 2022

மரணத்தைக் குறித்து வேத வாக்கியம் என்ன போதிக்கிறது?

பாடம் :01 சரீரப் பிரகாரமான மரணம்

மரணத்தைக் குறித்து வேத வாக்கியம் என்ன போதிக்கிறது?

நாம் இந்த நாளில் வேத வாக்கியத்தில் மரணத்தை குறித்து என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று கற்றுக்  கொள்ளபோகிறோம்

மரணம் என்றாலே எபிரேய மொழியில் பிரிவு என்று தான் இருக்கிறது

முதலாவது தேவன் மனுஷனை விட்டு  தூரமாய் போவது அல்லது  தேவன் மனுஷனை தன்னை விட்டு துரப்படுத்துவது தான் ஆத்தும மரணமாக இருக்கிறது

இரண்டாவது சரீரத்தை விட்டு ஆவி பிரிவது தான் சரீரபிரகாரமான  மரணமாக இருக்கிறது

நம்முடைய வேத வாக்கியம் முக்கியமாக இந்த இரண்டு விதமான மரணத்தைக் குறித்து தான் அதிகம் பேசுகிறது

1) நாம் பாவம் செய்கின்ற போது நம்முடைய ஆத்துமா மரித்து போகிறது அது தான் ஆவிக்குரிய மரணமாக இருக்கிறது என்று வேதவாக்கியம் போதிக்கிறது 

தேவனை அறியாமலும் அவருடைய சத்தியத்திற்கு கீழ்படியாமலும் உலகத்தில் வாழக்கூடிய எல்லாருடைய ஆத்துமாக்களும் தேவனுக்கு முன்பாக மரித்து தான் இருக்கிறது
எசே 18:4 இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.
ரோம 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

எல்லாரும் பாவம் செய்யும் போது அவர்கள் தங்கள் ஆத்துமாக்களில் மரிக்கிறார்கள்

சுகபோகமாய் வாழ்கிறவர்கள்  தேவனுடைய பார்வையில் தங்கள் ஆத்துமாவில்  செத்தவர்களாய் தான் இருக்கிறார்கள்
1தீமோ 5:6 சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.
 
உலகத்தில் யார் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படுகிறார்களோ
அந்த ஆத்துமாக்கள் தான் தேவனுக்கு முன்பாக ஜீவனோடு இருக்கிறது

நாம் இப்போது  எல்லாருக்கும் நியமிக்கப்பட்டு இருக்கிற இரண்டாவது மரணமாகிய சரீரபிரகாரமான மரணத்தைப் பற்றி தான் பார்க்க போகிறோம்

2) சரீரத்தை விட்டு ஆத்துமா வெளியேறுகின் போது அது  சரீர பிரகாரமான மரணமாக இருக்கிறது

எல்லாருக்கும் பிறக்க ஒரு காலம் இருக்கிறது போல  இறப்பதற்கு ஒரு காலம் இருக்கிறது
பிர 3:2 பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு;

இந்த இரண்டு மரணத்தை குறித்து இயேசு கிறிஸ்து ஒரே வசனத்தில் சொன்னதை கவனியுங்கள்
மத் 8:21 அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
மத் 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.

இந்த வசனத்தில் இயேசு சரீரத்தில் மரித்தவரை ஆத்துமாவில் மரித்தவர்கள் அடக்கம் பண்ணட்டும் என்று சொல்லுவதை நாம் கவனிக்க வேண்டும் 

உலகத்தில் வாழக்கூடிய தேவனுடைய பிள்ளைகளாக இருந்தாலும் சரி பாவிகளாக இருந்தாலும் சரி எல்லாருக்கும் மரணம் என்பது  நியமிக்கப்பட்டு இருக்கிறது
எபி 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

தன்னுடைய ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல்  எந்த மனுஷனுக்கும் அதிகாரமில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
பிர 8:8 ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.

எல்லாருக்கும் மரணநாள் என்பது இருக்கிறது அந்த நாளில் யார் ஒருவரும் தப்பிப்போக முடியாது என்பதை நாம் கவனிக்க வேண்டும் 

ஆனால் அந்த மரணநாள் நமக்கு தெரியுமா?
நமக்கு நிச்சயமாக தெரியாது 

தேவன் ஒருவருக்கு மரணநாளை குறித்தார் அதிலிருந்து அவர் தப்பிக்கொண்டாரா என்பதை நாம் வேத வாக்கியத்தை கவனிப்போம் 

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் தேவனுக்கு விரோதமாக துரோகம் பண்ணிகொண்டே இருந்தபடியால் தேவன் அவரை கொல்ல சித்தம் கொண்டார்
1இராஜா 22:20 அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.

ஆகாப் ராமோத்திலே யுத்தத்தில் சாக வேண்டும் என்று தேவன் குறித்து வைத்தார் ஆனால் தான் அந்த நாளில் சாக கூடாது என்று ஆகாப் நினைத்து யோசேபாத்திற்கு  ராஜா வஸ்திரத்தை தரித்து யுத்தத்தில் பிரவேசிக்க செய்தார் ஆனால் ஆகாப் வேஷம் மாறி யுத்தகளத்திற்கு வந்தார்

ஆனால் தேவன் குறித்த அந்த நாளில் ஆகாப் செத்துப்போனார்
1இராஜா 22:34 ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான்.

யுத்த களத்தில் ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்த போது அது ஆகாபுடைய கவசத்தின் சந்துகள் பட்டது அவர் அங்கே செத்துப்போனார்

ஆகாப்  அந்த மரண நாளில்  தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார் ஆனால் அவரால் அந்த மரணநாளில் தப்பித்து கொள்ள முடியவில்லை

அந்த மரணநாள் என்பது யார் ஒருவருக்கும் தெரியாது ஆனால் அந்த நாளில் நாம் யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பது தான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய சத்தியமாய் இருக்கிறது 

ஐஸ்வர்யவானாக இருந்தாலும் சரி தரித்திரனாக இருந்தாலும் மரணம் என்ற இந்த போருக்கு யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது
லூக் 16:22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.

இப்போது கேள்வி என்னவென்றால் மனிதனுக்கு மரணம் எப்படி சம்பவிக்கும்?

மனிதன் எந்த வயதிலும்  எப்படி வேண்டுமானாலும் மரித்து போகலாம் என்பதை நாம் அறிந்து இருக்க வேண்டும்
1சாமு 26:10 பின்னும் தாவீது: கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப் போய் மாண்டாலொழிய,

தீர்க்கதரிசியாகிய எலிசா மரணத்துக்கேதுவான வியாதி வந்து மரித்தார்
2இராஜா 13:14 அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.

ஸ்தேவான் வாலிப வயதில் கொலை செய்யப்பட்டு மரித்துப்போனார்
அப் 7:59 அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
அப் 7:60 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்

அநேகர் விபத்தில் கூட மரித்து போகிறார்கள்
லூக் 13:4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?

சில பரிசுத்தவான்கள் பூரண வயதில் சமாதானத்தோடு மரித்து இருக்கிறார்கள்
யோபு 42:16 இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
யோபு 42:17 யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.
உபா 34:7 மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.

கர்த்தருக்கு சித்தமானால் இன்னும்  தொடர்ந்து சரீர மரணத்தைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற  9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்

Monday, 20 June 2022

நாம் தேவனை தொழுது கொள்ளுவதின் நோக்கம் என்ன?


நாம் எல்லாரும் பூமிக்குரிய ஆசிர்வாதத்தை  பெறுவதுதான் தொழுது கொள்ளுவதின்  நோக்கமா? 

இன்றைக்கு அநேக போதகர்கள் அப்படித்தான் போதிக்கிறார்கள்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரமாணம் அப்படித்தான் போதிக்கிறதா?

தேவனை மாத்திரம் மகிமைப்படுத்துவது தான் ஆராதனை என்று அநேகர் நினைக்கிறார்கள் அது சரியா? 

ஆராதனையில் ஜெபிக்கிறோம் யாருக்காக ஜெபிக்கிறோம்?

ஆராதனையில் பாடல் பாடுகிறோம் எதற்காக பாடுகிறோம்?

தேவனுடைய சத்தியங்களை பிரசங்கிக்க கேட்கிறோம்  எதற்காக கேட்கிறோம்?  

கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுகிறோம் என்ன நோக்கத்திற்காக பங்கு பெறுகிறோம்?

காணிக்கை கொடுக்கிறோம் எதற்காக கொடுக்கிறோம்?

இந்த ஐந்து பகுதியையும் நமக்காக செய்கிறோமா அல்லது தேவனுக்காக செய்கிறோமா?

மேலே சொல்லப்பட்ட ஆராதனைக்குரிய காரியங்கள் நம்முடைய பக்தி விருத்திக்காக செய்யும் படி தேவன் நமக்கு கட்டளையிட்டு இருக்கிறார் 

நாம் வேத வாக்கியத்தின் படி அவருடைய கட்டளையின் படி செய்யும்போது தான் தேவனை நாம் மகிமைப்படுத்துகிறோம்

இதில் எது ஒன்றிலும் வசனத்தை மீறுவோம் என்றால் அது வீணான ஆராதனையாகிவிடும் 

பழைய ஏற்பாட்டில் தேவனுடைய சமூகத்தில் செய்யப்பட்ட அநேக தொழுது கொள்ளுதலை தேவன் ஏற்று கொள்ளவில்லை

தேவனுக்கு பயந்து அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து அவர் கட்டளையிட்ட  பிரகாரம் ஆராதனை செய்யும் போது தான் தேவன் அதை ஏற்று கொண்டு இருக்கிறார் 

நாம் இன்றைக்கு தேவனுடைய சபையாக  தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் நாம் சபை கூடிவருவத்தின் நோக்கம் என்ன என்பதை வசனத்தின் அடிப்படையில் உணர்ந்து கொள்ள வேண்டும் 

நாம் சபையாக கூடிவருவதின் நோக்கம் என்ன?

நாம் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக வளர வேண்டும் என்பதற்காக தான் கூடி வருகிறோம்
ரோம 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.

தேவன் நமக்கு வேதவாக்கியங்களை கொடுத்ததின் நோக்கம் என்ன?
2தீமோ3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
2 தீமோ 3:17அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 

நாம் தேவனுடைய  சத்தியத்தை கேட்டு கிறிஸ்துவை போல தேறினவர்களாக (பூரண புருஷர்களாக) இருக்க வேண்டும் என்பதற்கு தான் வேத வாக்கியங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது 

அப்போஸ்தர்களையும்  தீர்க்கதரிகளையும் மற்ற ஊழியங்களையும் தேவன் ஏன் ஏற்படுத்தினார்?
எபே 4:11:-மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,
எபே 4:12:-பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
எபே4:13:அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். 

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்தி விருத்தி அடைந்து கிறிஸ்துவின் நிறைவான அளவுக்குத்தக்கதாக பூரண புருஷராக வேண்டும்

இன்றைக்கு எத்தனை பேர் சபையானது கிறிஸ்துவின் வளர்சிக்குத்தக்கதாக பூரண புருஷராக வேண்டும் என்று போதிக்கிறார்கள்?  

இன்றைக்கு கிறிஸ்தவம் என்பது  அநேக கள்ளப்போதகர்களாலே   வியாபாரமாகி விட்டது 

இப்படிப்பட்டவர்கள் தேவனுக்கு அல்ல தங்கள் வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள் அவர்களுடைய தேவன் அவர்கள் வயிறு என்று பவுல் சொல்லுவதை மனதில் வைத்து கொள்ளுங்கள் 

இந்த கள்ள போதகர்களை அவர்களுடைய கனிகளினாலே அறிந்து கொள்ள முடியும் 

இன்றைக்கு அநேக கள்ளப்போதகர்களுடைய ஆராதனை என்பது எப்படி இருக்கிறது?

நடனம் பண்ணுவது  குதிப்பது,  விழுவது,  பலமாக சிரிப்பது, கத்துவது, கையை தட்டுவது, விசில் அடிப்பது 
அடிக்கடி  அல்லேலூயா சொல்லுவது, ஆமென் என்று சொல்லி  கடைசியில் தசமபாக காணிக்கை வாங்குவது 

இதில் எங்கே பக்திவிருத்திக்கான காரியங்கள் இருக்கிறது? 

பழைய ஏற்பாட்டில் தேவாலயம் கட்டப்படும் போது உளியின் சத்தம் கூட அதில் கேட்கப்படவில்லை என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்

இப்படி பட்ட கள்ள போதகர்கள் தேவாலயத்தை (தேவனுடைய சபையை) கள்ளர் குகையாக (வியாபார ஸ்தலம்) வைத்து இருக்கிறார்கள் 

தேவனுக்கு பிரியமான ஆராதனை செய்ய வேண்டும் என்றால் எப்படி செய்ய வேண்டும்?
எபி 12:28:-ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். 
எபி12:29:- நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே 

தேவனுக்கு ஆராதனை செய்யும் போது அதில் தேவனுக்குரிய பயமும் பக்தியும் இல்லை என்றால் அங்கே தேவன் வாசம் செய்வதில்லை அது வீணான ஆராதனையாகவே இருக்கும் 

சகலமும்  நல்லொழுக்கமாயும் கிரமமாயும் இருக்க வேண்டும்
1 கொரி 14:40:-சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது. 

பிரசங்கியார் வேத வாக்கியங்களை போதிக்க வேண்டும் விசுவாசிகள் அமைதலோடு கற்றுக்கொண்டு அதற்கு கீழ்ப்படிய வேண்டும் 

தேவனுடைய சபையிலே ஆராதனையிலே தேவன் ஒருவர் மாத்திரமே மகிமைப்பட வேண்டும்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்

Monday, 13 June 2022

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய யூதாஸ் காரியோத் ஏன் விழுந்து போனார்?

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய  யூதாஸ் காரியோத் ஏன் விழுந்து போனார்?

இன்றைக்கு அநேகர் இயேசு கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் பணத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் 

அநேகர் இயேசு கிறிஸ்துவை காட்டிலும் பணத்தை தான் மதிக்கிறார்கள் 

இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு தன்னுடைய ஊழிய நாட்களில் ஒரு எச்சரிப்பை கொடுத்தார்
லூக் 12:15 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

எவ்வளவு திரளான ஆஸ்திகள் வைத்து இருந்தாலும் அது ஒரு போதும் அவர்களுக்கு ஜீவனை தராது

இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு அநேக சமயங்களில் பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார் ஆனால்  அவருடைய அப்போஸ்தலர்களில் ஒருவராய் இருந்த யூதாஸ் காரியோத் பண ஆசை உடையவராக தான் இருந்தார்

நாம் இயேசு கிறிஸ்துவோடு இருந்தாலும் சாத்தான் நம்மை வீழ்த்துவதற்கு  அருகில் தான் இருக்கிறான் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் 

அவன் கெர்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமென்று வகை தேடி சுற்றித்  திரிகிறான்
1 பேதுரு 5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களை தெரிந்து எடுப்பதற்கு முன்பதாக இரா முழுவதும் ஜெபித்து தான் தெரிந்தெடுத்தார்
லூக் 6:12 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
லூக் 6:13 பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.

பிதா தான் அப்போஸ்தலர்களை உலகத்தில் இருந்து தெரிந்தெடுத்து இயேசு கிறிஸ்துவுக்கு கொடுத்தார்
யோவா 17:6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

யூதாஸ் காரியோத்தும் பனிரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராய் இருந்தார்
லூக் 6:16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.

இயேசு கிறிஸ்துவோடு கூட அவர் ஊழியத்தின் கடைசி நாட்கள் மட்டும் அவரோடு கூட தான் இருந்தார் 

இயேசு கிறிஸ்துவின் சகல உபதேசங்களையும் அறிந்தவர் 

இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில் மற்ற அப்போஸ்தலர்களை போல இவரும்  கிராமங்களுக்கு சென்று சுவிசேஷம் அறிவித்தவர் தான்
லூக் 9:6 அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.

யூதாஸ் காரியோத் மாத்திரம்  ஏன் விழுந்து போனார்?

அவருக்கு கர்த்தருடைய ஊழியத்தை காட்டிலும் பணத்தின் மேல் தன் இருதயத்தை வைத்து இருந்தார்

பனிரெண்டு அப்போஸ்தலர்களில் அவர் மாத்திரமே பணப் பையை சுமக்கிறவராய் இருந்தார்

தரித்திரர்களுக்கு உதவி செய்யவும் மற்ற தேவைகளை சந்திக்கவும் யூதாஸ் காரியோத்தின் கையில் அந்த பணப்பை கொடுக்கப்பட்டு இருந்தது
யோவா 13:29 யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.

யூதாஸ் காரியோத் அந்த பணப்பையை வைத்து இருந்த போது அந்த பணப்பையில் இருந்து அவர் திருடிக் கொண்டு இருந்தார்
யோவா 12:6 அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.

இயேசு கிறிஸ்துவுக்குரியத்தை    அவர் திருடிக் கொண்டு இருந்தாலும் இயேசு கிறிஸ்து அதை திரும்பக் கேட்கவில்லை
லூக் 6:30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.

அந்த பணம் நற்கிரியைகள் செய்யும் படியாக இயேசு கிறிஸ்து அந்த பொறுப்பை அவரிடம்  கொடுத்து இருந்தார் 

தனக்கு கொடுக்கப்பட்ட உக்கிரான உத்தியோகத்தில் யூதாஸ் காரியோத் உண்மையுள்ளவராக இருக்கவில்லை 

யூதாஸ் காரியோத்  பணத்தை திருடிக் கொண்டு இருக்கிறார் என்று இயேசு கிறிஸ்து ஒருமுறை கூட அப்போஸ்தலர்களுக்கு முன்பாக அவரை குற்றப்படுத்தவில்லை

யூதாஸ் காரியோத் பணத்தை திருடிக் கொண்டு இருப்பதை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தாலும் யூதாஸ் காரியோத் எதை விரும்பினாரோ அதற்கே அவரை ஒப்புக் கொடுத்து இருந்தார்
சங் 109:17 சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.

யூதாஸ் காரியோத் தான்  திருடக்கூடிய பணம் ஆசீர்வாதம் என்று நினைத்து கொண்டு இருந்தார் ஆனால் அது அவருக்கு சாபமாய் இருந்தது 

யூதாஸ் காரியோத் தன்னுடைய இருதயத்தை பணத்தின் மீது தான் வைத்து இருந்தார்
மத் 13:22 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான்.

இயேசு கிறிஸ்துவோடு கூட இருந்து யூதாஸ் காரியோத் வசனத்தை கேட்டலும் ஐஸ்வரியத்தின் மயக்கம் வசனத்தை நெருக்கிப் போட்டபடியினால் பலனற்றுப் போனார்

இயேசு கிறிஸ்துவின் பாதத்தில்  மரியாள் களங்கமில்லாத நளதம் என்னும்  தைலத்தை பூசின போது யூதாஸ் காரியோத் என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள்
யோவா 12:4 அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
யோவா 12:5 இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.

நளதம் என்னும் தைலத்தை விற்று கொடுத்தால் யூதாஸ் காரியோத் தரித்திரருக்கு கொடுத்து இருப்பாரா?

யூதாஸ் காரியோத் தரித்திரர் மேல் கவலையாய் இருந்தாரா?
யோவா 12:6 அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.

யூதாஸ் காரியோத் தரித்திரர் மேல் அவர் கவலையாக இல்லை அந்த களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தை  முந்நுறு பணத்துக்கு விற்று கொடுத்தால் தரித்திரருக்கு உதவி செய்வேன் என்கிற பெயரில் தன்னுடைய பணப்பையை நிரப்ப ஆசையாக இருந்தார்

யூதாஸ் காரியோத் இயேசு கிறிஸ்துவைக் காட்டிலும் பணத்தை மேலாக மதித்தார்

பணத்தை உயர்வாக மதித்தபடியால் இயேசு கிறிஸ்துவை  காட்டிக் கொடுப்பதற்கு பேரம் பேசிக் கொண்டு இருந்தார்
மத் 26:14 அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்:
மத் 26:15 நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.
மாற் 14:11 அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.

இயேசு கிறிஸ்துவைக் காட்டிலும் யூதாஸ் காரியோத் பணத்தை உயர்வாக மதித்தபடியால் அவர் அந்த சோதனையில் விழுந்து போனார்

யூதாஸ் காரியோத் என்ன  விரும்பினாரோ அந்த காரியத்தை செய்யும் படியாகவே இயேசு கிறிஸ்து அவரை ஒப்புக்கொடுத்தார்
யோவா 13:27 அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.

இயேசு கிறிஸ்து மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு மனஸ்தாப்பட்டார்
மத் 27:3 அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:

அந்த முப்பது வெள்ளிக்காசை திரும்ப கொண்டு வந்து அவர்களிடத்திலே கொடுத்தார் 

இயேசு கிறிஸ்து குற்றமில்லாதவர் என்பதை யூதாஸ் காரியோத் அறிந்து இருந்தாலும் அவருடைய பண ஆசை தான் அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்தது
மத் 27:4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.

தான் செய்த பாவத்திற்கு மனஸ்தாப்பட்டார் ஆனால் மனந்திரும்பாமல் தற்கொலை செய்து கொண்டார்
மத் 27:5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.

யூதாஸ் காரியோத் விசுவாசத்தை விட்டு விலகி தன்னை அநேக வேதனைகளாலே உருவ குத்திக் கொள்ளுவதற்கு பண ஆசைதான் எல்லா தீமைக்கும் காரணமாய் இருந்தது
1தீமோ 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

யூதாஸ் காரியோத்  தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்பட்டு விழுந்து போய் விட்டார்
யாக் 1:14 அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
யாக் 1:15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

யூதாஸ்காரியோத் இயேசு கிறிஸ்துவோடு கூட இருந்தாலும் விழுந்து போனார் நாமும் விழுந்து போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது 

யூதாஸ் காரியோத்தை காட்டிலும் மோசமான நிலையில் தான் இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள்

பணத்திற்காக சத்தியத்தை புரட்டுவதற்கும் தயாராக இருக்கிறார்கள் 

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Wednesday, 8 June 2022

இரட்சிக்கப்படாத கணவன் அல்லது மனைவியைப் பற்றி புதிய ஏற்பாடு என்ன போதிக்கிறது?

பாடம்:16 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?
 
இரட்சிக்கப்படாத கணவன் அல்லது மனைவியைப் பற்றி புதிய ஏற்பாடு என்ன போதிக்கிறது?

விவாகம் என்பது பாவமா?

விவாகம் என்பது பாவம் அல்ல
1கொரி 7:28 நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல; கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல ....
1கொரி 7:36 ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது
எபி 13:4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; ,,,,,

அப்போஸ்தலனாகிய பவுல் விவாகத்தைப் பற்றி யோசனை ஒன்றை சொல்லுகிறார்
1கொரி 7:6 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன்.
1கொரி 7:7 எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்குத் தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.

இங்கே அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசுகிறார் இது கட்டளை அல்ல இது யோசனை
1கொரி 7:40 ,,,,, என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.

வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம்
1கொரி 7:8 விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
1கொரி 7:9 ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்.

திருமணமானவர்களுக்கு தேவனுடைய ஆலோசனை என்ன?

ஒரு குடும்பத்தில் கணவனோ அல்லது மனைவியோ இரட்சிக்கப்படவில்லை என்றால் என்ன செய்வது?

மனைவியானவள் தன் புருஷனை விட்டு பிரிந்து போக கூடாது
1கொரி 7:10 விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக்கூடாது.

இங்கே பிரிந்து போவது என்பது விவாகரத்து அல்ல அது தற்காலிக பிரிவு மாத்திரமே ஏனென்றால் அவள் தன் புருஷனோடு ஒப்புரவாக வேண்டும் என்று தேவன் கட்டளையிடுகிறார்

பிரிந்து போக கூடிய மனைவி விவாகமில்லாமல் இருக்க வேண்டும் அல்லது தன் புருனோடே ஒப்புரவாகக்கடவள்
1கொரி 7:11 பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள் அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.

மனைவி அவிசுவாசியாயிருந்து புருஷனோடு வாழ சம்மதமிருந்தால் என்ன செய்வது?
1கொரி 7:12 மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.

புருஷன் அவிசுவாசியாயிருந்து மனைவியோடு வாழ சம்மதமிருந்தால் என்ன செய்வது?
1கொரி 7:13 அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.

புருஷனும் மனைவியும் சேர்ந்து வாழும் போது அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் பரிசுத்தமாக இருக்கிறார்கள்
1கொரி 7:14 என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.

ஆனால் புருஷனோ அல்லது மனைவியோ வாழ சம்மதியாமல் இருந்தால் என்ன செய்வது?
1கொரி 7:15 ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல.

சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
1கொரி 7:16 மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?

கணவனோ அல்லது மனைவியோ கிறிஸ்தவர்களாய் இருப்பதினால் இருவரில் ஒருவர் வாழ சம்மதியாமல் பிரிந்து போக விருப்பட்டார்கள் என்றால் அவர்கள் பிரிந்து போகலாம்
1கொரி 7:15 ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
 
அப்படி பிரியக்கூடியவர்கள் ஒருபோதும் மறுமணம் செய்யக்கூடாது
1கொரி 7:10 விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக்கூடாது.
1கொரி 7:11 பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.

பாடம் நிறைவுற்றது

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Thursday, 2 June 2022

இயேசு கிறிஸ்து சிலுவையில் குலைத்து போட்டது மோசேயின் கையால் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தை தான் என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா?

பாடம் :12 ஓய்வு நாள் பிரமாணம் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?                                   
இயேசு கிறிஸ்து சிலுவையில் குலைத்து போட்டது  மோசேயின் கையால் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தை தான் என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா?

ஓய்வுநாளை ஆசரிக்கிறவர்களின் முக்கியமான உபதேசம் இது தான்
1) தேவன் எழுதிய பத்து கற்பனைகள் தேவனுடைய நியாயப்பிரமாணம்
2) மோசே தன்னுடைய கையால் எழுதிய எல்லா பிரமாணங்களும் மோசேயினுடைய நியாயப்பிரமாணம் என்கிறார்கள்

பத்து கட்டளைகளை தேவன் தம்முடைய கையால் எழுதி கொடுத்தார் அது தேவனுடைய நியாயப்பிரமாணம் அதை கிறிஸ்து சிலுவையில் குலைத்துப் போடவில்லை என்கிறார்கள் அது உண்மையா?

பழைய ஏற்பாட்டில் பத்து கட்டளைகளை   கொடுக்கப்பட்ட போது என்ன சம்பவித்தது என்பதை முதலில் கவனிப்போம்
யாத் 24:12 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.

தேவன் பத்துக் கற்பனைகளை அவரே எழுதி அதை மோசேயினிடத்தில் கொடுத்தார்
யாத் 31:18 சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.
உபா 9:9 கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.
உபா 9:10 அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.
உபா 5:22 இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்.

ஆனால்  இஸ்ரவேல் ஜனங்கள் செய்த அக்கிரமத்தின்  நிமித்தம்  அவர்கள் மேல் இருந்த கோபத்தினால் பத்து கற்பனைகளை மோசே உடைத்துப் போட்டார்
உபா 9:11 இரவும் பகலும் நாற்பதுநாள் முடிந்து, கர்த்தர் எனக்கு அந்த உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறபோது,
உபா 9:12 கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாய் இவ்விடம் விட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்.
உபா 9:15 அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளில் இருந்தது.
உபா 9:16 நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்.
உபா 9:17 அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் ஓங்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன்.

முதலில் எழுதின கற்பலகை  தேவனுடையது  அதில் தான் தேவன் பத்து கற்பனைகளை எழுதினார் அதை தான் மோசே உடைத்து போட்டார் 

மறுபடியும் தேவன் கற்பலகைகளில்  எழுதுவதற்கு மோசேயிடம் கற்பலகைகளை இழைத்துக் கொண்டு வர சொன்னார்
யாத் 34:1 கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்;நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.
யாத் 34:4 அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான்.
உபா 10:1 அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா;ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.
உபா 10:2 நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.

மோசே கொண்டு போன போது கற்பலகைளில் தேவன் மறுபடியும் அந்த பத்துக் கற்பனைகளை எழுதி கொடுத்தார்
உபா 10:3 அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன்.
உபா 10:4 முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக் கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்த பிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.
உபா 10:5 அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது.

ஆனால் அங்கு பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளை மறுபடியும்  கற்பலகையில்  எழுதியது யார்?
யாத்  34:28 அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.

தேவன் எழுதினார் என்று சொன்னாலும் மோசே எழுதினார் என்று சொன்னாலும் அது தேவனுடைய வார்த்தை ஏனென்றால் அது தேவனுடைய அதிகாரத்தில் இருந்து வந்திருக்கிறது

ஒரு உதாரணம் ஒன்றைக் கவனியுங்கள்

இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் கொடுத்தார் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது
யோவான் 4:1
யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம்பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,

ஆனால் இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் கொடுக்கவில்லை அவருடைய சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள்
யோவான் 4:3 இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்

இயேசு ஞானஸ்நானம் கொடுத்தாலும் அவருடைய சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுத்தாலும் அதிகாரம் ஒருவரிடத்தில் மாத்திரம் இருக்கிறது

புதிய ஏற்பாடு புஸ்தகத்தை  நிறைய பரிசுத்தவான்கள் எழுதினார்கள் அதினால் அது தேவனுடைய வார்த்தை இல்லையா?

அது எல்லாமே தேவனுக்கு சொந்தமானது

புதிய ஏற்பாடு மனுஷர்கள் மூலமாக ஏவப்பட்டு பேசினாலும் எழுதினாலும் அது கிறிஸ்துவின் பிரமாணம் என்றுதான் அழைக்கப்பட்டிருக்கிறது

நியாயப்பிரமாணத்தை மோசே எழுதினாலும் அது தேவனுடைய நியாயப்பிரமாணமாகத்தான் இருக்கிறது 

பவுல் நிருபங்களை எழுதினாலும் அது தேவனுடைய கற்பனைகளாகத் தான் இருக்கிறது
1 கொரி 14:37 ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்.

வேத வாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டு இருக்கிறது

இயேசு கிறிஸ்து சிலுவையில் குலைத்துப் போட்டது தேவனுடைய நியாயப்பிரமாணத்தையா அல்லது மோசேயின்  பிரமாணத்தையா?
கொலோ 2:14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து
கொலோ 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

இங்கே சொல்லப்பட்டது மோசேயின் பிரமாணம் என்றால் இந்த வசனத்தில் ஏன் ஓய்வுநாளை குறித்தாவது ஒருவனும் உங்களை குற்றப்படுத்த வேண்டாம் என்கிறார்?
கொலோ 2:16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
கொலோ 2:17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

ஆனால் இந்த வசனத்தை ஓய்வு நாள் சபையார் ஏற்று கொள்ள மாட்டார்கள் இது மோசேயின் பிரமணத்தில் உள்ள ஓய்வு நாள் சம்பத்தப்பட்ட பிரமாணங்கள் என்பார்கள்

ஆனால் இங்கே சொல்லப்பட்டு இருக்கிற பலிகளும் ஓய்வுநாட்களும் பண்டிகைகளும் கர்த்தருடைய நியாயப்பிரமாணம்  தான் என்று தேவனுடைய பலமான சாட்சி நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது
2நாளா 31:3 ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான்.

இங்கே சொல்லப்படக்கூடிய சர்வாங்க தகனபலிகளும், ஓய்வு நாட்களும், பண்டிகை காலங்களில் செலுத்தவேண்டிய தகன பலிகளும், பத்து கட்டளைகளில் இருக்கிறதா?

இல்லை அது மோசேயின் பிரமாணத்தில் இருக்கிறது

அப்படியென்றால் தேவன் இதை கர்த்தருடைய நியாயப்பிரமாணம் என்று ஏன் அழைக்கிறார்?

வேத வாக்கியத்தில் பலிகளும் ஓய்வுநாட்களும் பண்டிகைகளும் கர்த்தருடைய நியாயப்பிரமாணம் தான் என்று தேவன் சாட்சிக் கொடுக்கிறார் அவருடைய சாட்சி உண்மையானதா இல்லை இது எல்லாம் மோசேயின் பிரமாணம் மாத்திரம்தான் என்று சொல்லக்கூடிய இவர்களுடைய சாட்சி  உண்மையானதா?

நம்முடைய தேவன் ஒருபோதும் பொய்யுரையாதவர்
தீத்து 1:3 பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி,,,,,,,,

கொலோசெயர் 2:15-17  வசனத்தில் பண்டிகை நாளும் மாதப்பிறப்புகளும் போஜனபலியும் பானபலியும் ஓய்வுநாட்களும் சிலுவையில் குலைத்துப் போடப்பட்டு இருக்கிறது

போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் குறித்தாவது ஒருவனும் நம்மை குற்றப்படுத்த முடியாது என்றால் ஓய்வுநாட்களையுங் குறித்தும் ஒருவனும் நம்மை குற்றப்படுத்த முடியாது

மோசேயின் பிரமாணம் என்றாலும் கர்த்தருடைய நியாயப்பிரமாணம் அல்லது தேவனுடைய  நியாயப்பிரமாணம் என்றாலும் மூன்றும் ஒன்று தான்,சிலுவையில் குலைத்துப் போடப்பட்டதும் இது தான்

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்