Wednesday, 9 August 2017

ஓய்வு நாள் பிரமாணம் நமக்கு கொடுக்கப்பட்டதா?



பகுதி:1 ஓய்வு நாள் பிரமாண உபதேசங்கள்                                                            

ஓய்வு நாள் பிரமாணம் நமக்கு கொடுக்கப்பட்டதா?

இன்றைய கிறிஸ்தவத்தில் கள்ளப்போதகங்கள் அதிகமாக பரவி கிடக்கிறது அதினால் பலவகையான பிரிவினை கூட்டங்கள் அதிகரித்து வருகிறது இதற்கு காரணம் ஜனங்கள் சத்தியங்கள் போதிக்கப்படும் போது தேவனுடைய வேத வாக்கியங்களோடு ஒப்பிட்டு பார்க்காததே காரணமாக இருக்கிறது

எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதை பிடித்துக் கொள்ளுங்கள் என்ற தேவனுடைய கட்டளைக்கு அநேகர் கீழ்ப்படியாமல் போனதினாலே அநேக கள்ள உபதேசங்கள் பெருகி இருக்கிறது

ஒய்வுநாள் பிரமாணம் நமக்கு கொடுக்கப்பட்டதா என்ற சத்தியங்களை படிப்பதற்கு முன்பதாக சில விசயங்களை உங்கள் மனதிலே வைத்துக் கொள்ளுங்கள்


  • தேவனால் வெளிப்படுத்தப்பட்ட வேத வாக்கியங்களுக்கு  மாத்திரமே நாம் செவி கொடுக்க வேண்டும்
  • எந்தவொரு சத்தியங்களாக இருந்தாலும் பகுத்து பார்த்தாலும் உண்மையான சத்தியங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்
  • வேத வாக்கியங்கள் சத்தியங்களை எப்படி போதிக்கிறதோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்
  • மனுஷர்களுடைய சுயமான கற்பனைகளுக்கு ஒருபோதும் நம்முடைய செவியை சாய்க்கக்கூடாது
  • காணாதவைகளில் நாம் துணிவாய் நுழையக்கூடாது அப்படி நுழைவோம் என்றால் நம்முடைய பந்தயப்பொருளை நாம் இழந்து விடுவோம்
  • வெளிப்படுத்தப்பட்டவைகள் நமக்குரியது மறைவானவைகள் நாம்முடைய தேவனுக்கே உரியது


ஓய்வு நாள் சபை எல்லன் ஜி ஒயிட் என்ற அம்மையாரால் ஆரம்பிக்கப்பட்டது, இந்த அம்மையாருக்கு தேவன் ஒரு தரிசனம் காண்பித்ததாகவும் அந்த தரிசனத்தில் பத்து கட்டளைகள் காண்பிக்கப்பட்டு அதில்  ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசாரிக்க நினைப்பாயாக என்ற கற்பனையில் மாத்திரம் தேவ மகிமை இறங்கியதாகவும் தெரிவித்து இந்த சபையானது ஆரம்பிக்கப்பட்டது

இந்த ஓய்வுநாளை ஆசாரிக்கக்கூடியவர்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார்களா?
Joh 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.


  • கிறிஸ்துவின் ஆடுகள் கிறிஸ்துவுக்கு மாத்திரமே செவி கொடுக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
  • கிறிஸ்து மாத்திரமே நம்முடைய வழியாகவும் சத்தியமாகவும் ஜீவனாகவும் இருக்கிறார்
  • கிறிஸ்துவின் மூலமாக தான் நாம் பிதாவிடம் சேர முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்


ஓய்வு நாள் ஆசரிப்பு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?
ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி தான் போதிக்க வேண்டும்
1Pe 4:11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ......
2Ti 2:5 மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.


  • தேவனுடைய வாக்கியங்களின்படி ஒருவன் போதிக்க வேண்டும் அந்த வேத வாக்கியத்தோடு ஒன்றையும் நாம் கூட்டவும் கூடாது குறைத்து போடவும் கூடாது அப்படி செய்வோம் என்றால் நாம் பொய்யர்களாய் இருப்போம்
  • வேத வாக்கியங்கள் என்ன போதிக்கிறதோ அதற்கு மாத்திரமே எந்தவொரு மனிதனும் செவி கொடுக்க வேண்டும்
  • நாம் எதை செய்வதாக இருந்தாலும் சட்டத்திட்டத்தின்படி தான் பண்ணவேண்டும் அப்படி செய்யாதபட்சத்தில் நாம் முடிசூட்டப்பட மாட்டோம்


கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் கிறிஸ்துவை உடையவன் அல்ல
2Jo 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.


  •  நாம் பிதாவையும் குமாரனையும் உடையவர்களாய் இருக்க கிறிஸ்துவின் உபதேசத்தில் மாத்திரம் நிலைத்து இருக்க வேண்டும்
  •   நாம் கிறிஸ்துவின் உபதேசத்தில் நடக்காமல் மீறி நடக்கும் போது நாம் தேவனை உடையவர்கள் அல்ல
  • கிறிஸ்துவின் உபதேசத்தில் எந்த மீறுதலையும் தேவன் அனுமதிப்பதும் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை


முதல் நுற்றாண்டு சபையின் விசுவாசிகள் அப்போஸ்தலர்களுடைய உபதேசத்தில் உறுதியாய் தரித்து இருந்தார்கள்
Act 2:42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

நாம் ஏன் அப்போஸ்தலர்களின் உபதேசத்தில் உறுதியாய் தரிந்து இருக்க வேண்டும்?
அப்போஸ்தலர்களுடைய வார்த்தைகள்(உபதேசங்கள்) கிறிஸ்துவினிடத்தில் இருந்து வந்தது
Joh 17:8 நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; ,,,,
Joh 17:14 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; ,,,,.
Joh 17:20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

அப்போஸ்தலர்களின் உபதேசங்கள் நமக்கு உறுதியாக்கப்பட்டு இருக்கிறது
Heb 2:3 முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,

தேவனுடைய வார்த்தையோடு ஒன்றையும் கூட்டவும் கூடாது குறைக்கவும் கூடாது
Pro 30:6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.
Deu 4:2 நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
Rev 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
Rev 22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.


  • தேவனுடைய வார்த்தைகளோடு கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ தேவன் நமக்கு எந்தவொரு அனுமதியும் கொடுக்கவில்லை
  •  தேவனுடைய வார்த்தைகளோடு கூட்டும் போதோ அல்லது குறைக்கும் போதே நித்திய ஜீவனுக்கான பங்கை நாம் இழந்து போய் விடுவோம்


ஓய்வுநாள் ஆசாரிப்பை நமக்கு தேவன் கொடுத்தாரா?
இந்த கேள்விக்கு நாம் தேவனுடைய வேத வாக்கியத்திலிருந்து தான் பதிலைப் பெற்றுக் கொள்ள முடியும்

தேவன் ஓய்வு நாள் ஆசாரிப்பை நமக்கு கொடுக்கவில்லை அதை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிட்டார்

ஓய்வு நாள் ஆசாரிப்பு என்பது தேவனுக்கும் இஸ்ரவேலருக்குமுள்ள உடன்படிக்கையின் அடையாளமாகும்
Exo 31:12 மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்:
Exo 31:13 நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
Eze 20:12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.
Eze 20:20 என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.

எதற்காக ஓய்வு நாளை ஆசாரிக்க வேண்டும் என்றால் இஸ்ரவேல் ஜனங்களை பரிசுத்தப்படுத்துகிறவர் கர்த்தர் என்பதை அவர்கள் அறியும்படிக்கு அதை ஆசாரிக்க வேண்டும்
Exo 31:13 ... உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.

ஓய்வுநாளை தேவனுடைய பிரமாணத்தின்படி ஆசாரிக்காதவன் கொலை செய்யப்பட வேண்டும்
Exo 31:14 ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
Exo 31:15 ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.

       ஒய்வுநாளை ஆசாரிக்காத இஸ்ரவேலர்கள் மாத்திரமே கொல்லப்பட்டார்கள் என்று வேத வாக்கியங்கள் போதிக்கிறது

தேவன் ஒய்வுநாள் இஸ்ரவேல் புத்திரரர்களுக்கு நித்திய உடன்படிக்கையாக கொடுத்து இருந்தார்
Exo 31:16 ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.
  

  • ஆதியாகம புஸ்தகத்தில் எந்தவொரு இடத்திலாவது எந்தவொரு பரிசுத்தவான்களாவது ஏழாம் ஓய்வுநாளை ஆசாரித்து இருக்கிறார்களா என்று தேடி பாருங்கள் ஒருவரைக் கூட உங்களால் கண்டு பிடிக்க முடியாது


அப்போஸ்தலர்களின் உபதேசத்தில் இருக்கக்கூடிய நாம் ஒய்வுநாளை ஆசாரிக்க வேண்டுமா?
அப்போஸ்தலர்களின் உபதேசத்தில் ஒய்வுநாள் பிரமாணம் என்று ஒன்று இருக்கிறதா?

தொடர்ந்து ஓய்வுநாள் பிரமாணத்தைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்







             





No comments:

Post a Comment