பகுதி:4 ஓய்வு நாள் பிரமாண உபதேசங்கள்
ஒய்வுநாள் பிரமாணங்கள்
இஸ்ரவேல் ஜனங்களுக்கு அது கொடுக்கப்பட்டது என்று அநேக வேத வாக்கியங்களை ஆதாரமாக பார்த்து
இருக்கிறோம்
நியாயப்பிரமாணங்களுக்கு
நாம் அப்பற்பட்டவர்களாக தான் புறஜாதிகள்(நாம்) இருந்தார்கள் என்றும் கற்றுக் கொண்டு
இருக்கிறோம்
- இஸ்ரவேலர்களுக்கு தேவன் நியாயப்பிரமாணத்தை கொடுத்தாலும் அதில் அவர்கள் நிலை நிற்கவில்லை
- ஆகையால் தேவன் புது உடன்படிக்கையை ஏற்படுத்த போவதாக எரேமியாவைக் கொண்டு தீர்க்கதரிசனமாக உரைத்தார்
புது உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்று தேவன்
வாக்குத்தத்தம் செய்து இருந்தார்
Jer 31:31 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.
Jer 31:32 நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Jer 31:33 அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
முதலாம் உடன்படிக்கை(நியாயப்பிரமாணம்) பிழையுள்ளதாக இருந்தது அதனால் தான் இரண்டாம்
உடன்படிக்கை(கிறிஸ்துவின் பிரமாணம்) வந்தது
Heb 8:7 அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.
Heb 8:8 அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.
Heb 8:9 அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தேவன் ஏன் புது உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார்?
தேவன் இஸ்ரவேல் ஜனங்களுடைய நாயகராயிருந்தும் அவருடைய உடன்படிக்கையை(நியாயப்பிரமாணத்தை)
மீறி அவமாக்கி போட்டார்கள்
தேவன் அந்த புது உடன்படிக்கையை எப்படி கொடுப்பேன் என்கிறார்?
நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்தில் வைப்பேன்
நியாயப்பிரமாணத்தை அவர்கள் இருதயத்தில் எழுதுவேன்
இந்த புதிய உடன்படிக்கையை பின்பற்றக்கூடியவர்களுக்கு இருக்கக்கூடிய ஆசீர்வாதங்கள்
என்ன?
நான் அவர்கள் தேவனாயிருப்பேன் அவர்கள் என் ஜனமாய் இருப்பார்கள்
அந்த
புது உடன்படிக்கைக்கு கிறிஸ்து மத்தியஸ்தராக இருந்தார்
1Ti 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
Heb 8:6 இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ,,,
Heb 9:15 ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.
Heb 12:24 புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ,,,,,,,,
அந்த புது உடன்படிக்கை மனதிலே வைத்து இருதயத்தில் எழுதப்பட்டது
Heb 8:10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
Heb 8:11 அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.
அந்த பழைய உடன்படிக்கை(நியாயப்பிரமாணம்) கி,பி 70 ல்
தேவாலயம் அழிக்கப்பட்ட போது அது உருவழிந்து போயிற்று
Heb 8:12 ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Heb 8:13 புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
நியாயப்பிரமாணத்தை குறித்து உண்டாக்குகிற வாக்குவாதங்களை
விட்டு விலகு
Tit 3:9 புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.
Tit 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனை விட்டு விலகு.
Tit 3:11 அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.
- நியாயப்பிரமாணத்தைக் குறித்து வாக்குவாதங்கள் செய்வோம் என்றால் அது அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்
புதிய ஏற்பாட்டு பாவ அட்டவணையில் ஓய்வுநாளை மீறுதல்
பாவம் என்று எந்தவொரு வசனமும் சொல்லவில்லை
- மனிதனுடைய இருதயத்தை தீட்டுப்படுத்தும் 13 பாவங்கள் (மாற் 7:20-23)
- இப்படிப்பட்ட பாவங்களைச் செய்கிறவர்கள் மரணத்திற்கு பாத்திரராயிருக்கிறார்களென்று 23 பாவங்களை எழுதுகிறார் (ரோம 1:19-21)
- இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை (17பாவங்கள்) கலா 5:19-21
- கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பிரவேசிக்க தகுதியற்றவர்கள்(7 பாவங்கள்) எபே 5:3-7
- கடைசி கால கொடிய பாவங்கள் (19 பாவங்கள்) 2தீமோ 3:1-5
- இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் (8 பாவங்கள்) வெளி 21:8
- தேவ ராஜ்யத்துக்கும் அவர் சமூகத்துக்கும் புறம்பே இருப்பார்கள் ( 6வித கொடிய பாவம்) வெளி 22:15
இந்த
அட்டவணையில் ஒரு பகுதியில் கூட ஓய்வு நாள் மீறியவர்களின் பட்டியல் இடம் பெற வில்லை
கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்
No comments:
Post a Comment