ஆதியாகம புஸ்தகத்திலும் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பதாகவும் திருமண உறவுகள் எப்படி இருந்தது?
நாம் மாம்ச இச்சைகளுக்காக மாத்திரம் திருமணம் செய்தால் என்ன சம்பவிக்கும் என்பதை வசன ஆதாரத்தோடு கற்றுக் கொண்டிருக்கிறோம்
தேவன் மனுஷக்கு ஏற்ற துணையாக ஒரே மனுஷியை உண்டாக்கினாலும் மனுஷர்கள் தங்கள் தேவைகளுக்கென்று பல திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை ஆதியாகம புஸ்தகத்தில் நாம் பார்க்க முடியும்
மனுஷன் தன் மனைவியாகிய ஒரே மனுஷியோடு தன் தகப்பனையும் தாயையும் விட்டு கூடி வாழ வேண்டும் என்று தேவன் விரும்பினார் ஆனால் மனுஷன் அப்படி இருக்க வில்லை
ஆனாலும் தேவன் ஆதியாகம புஸ்தகத்தில் ஒரு துணையோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று அவர் கட்டளை ஏதும் கொடுக்கவில்லை, அதனால் மனுஷர்கள் பல மணம் செய்து கொண்டாலும் கூட அது பாவமாக எண்ணப்படவில்லை
ஆதியாகம புஸ்தகத்தில் புருஷர்கள் தங்கள் சகோதரிகளை திருமணம் செய்து கொண்டார்கள் இதுவும் பாவமாக என்னப்பட வில்லை
பிரமாணம் கொடுக்கப்பட்டு அது மீறப்படும் போது தான் அது பாவம் ஆகிறது
பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்கும்
ரோம 7:8 ,,,, நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.
லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம் பண்ணி இருந்தார்
ஆதி 4:19 லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.
விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாம் மூன்று ஸ்திரீகளை விவாகம் பண்ணியிருந்தார்
ஆதி 11:29 ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண் கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.
ஆதி 16:3 ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
ஆதி 25:1 ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
ஏசாவும் பல ஸ்திரீகளை விவாகம் செய்து இருந்தார்
ஆதி 26:34 ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
ஆதி 36:2 ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும்,
ஆதி 36:3 இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணியிருந்தான்.
யாக்கோபு நான்கு ஸ்திரீகளை விவாகம் செய்து இருந்தார்
ஆதி 35:23 யாக்கோபின் குமாரர் பன்னிரண்டு பேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.
ஆதி 35:24 யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர்.
ஆதி 35:25 தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர்.
ஆதி 35:26 காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.
இப்படி ஆதியாகம புஸ்தகத்தில் பல ஸ்திரீகளை விவாகம் செய்த சம்பவங்கள் இருந்தாலும் தங்கள் சகோதரிகளை விவாகம் செய்த சம்பவங்களும் லோத்தின் குமாரத்திகள் தன் தகப்பனாகிய லோத்தோடு சேர்ந்த சம்பவங்களும் யூதா தன் மருமகளோடு அறியாமல் சேர்ந்த சம்பவங்களும் சொல்லப்பட்டு இருக்கிறது
லோத்துவின் குமாரத்திகள் அவரோடு சேர்ந்து சந்ததியை உண்டாக்கினார்கள்
ஆனால் இந்த சம்பவங்கள் லோத்துவுக்கு அறியாமல் நடந்த சம்பவங்கள் ஆகும்
ஆதி 19:30 பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள்.
ஆதி 19:31 அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.
ஆதி 19:32 நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.
ஆதி 19:33 அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
ஆதி 19:34 மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
ஆதி 19:35 அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள் அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
ஆதி 19:36 இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
ஆதி 19:37 மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
ஆதி 19:38 இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.
ஆனால் தேவன் இந்த சந்ததியை பல வருஷங்களாக ஏற்று கொள்ளவில்லை
மனச்சாட்சியின் பிரமாணத்தின் படி பாவங்களை நாம் உணர்ந்து கொள்ள முடியும்
ஆபிரகாம் தன் தகப்பனுடைய இன்னொரு மனைவிக்கு பிறந்த குமாரத்தியை திருமணம் செய்து இருந்தார்
ஆதி 20:11 அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
ஆதி 20:12 அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
யூதா தன் மருமகளோடு சேர்ந்த சம்பவமும் அறியாமல் சேர்ந்த சம்பவமாகும்
ஆதி 38:15 யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து,
ஆதி 38:16 அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.
ஆதி 38:26 யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை.
மோசேயின் தகப்பனாகிய அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம் செய்து இருந்தார்
யாத் 6:20 அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
தேவன் விவாகம் பண்ணக்கூடிய விசயத்தில் எந்தவொரு சட்டத்தையும் கொடுக்கவில்லை, ஆதலால் அது பாவமாகவும் எண்ணப்படவில்லை
கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்
Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்