Wednesday, 11 May 2022

ஒரு புருஷனையும் ஒரு ஸ்திரீயையும் விவாகத்தில் தேவன் எப்படி இணைக்கிறார்?

பாடம் :09 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?

ஒரு புருஷனையும் ஒரு ஸ்திரீயையும் விவாகத்தில் தேவன் எப்படி  இணைக்கிறார்?

உலகத்தில் இன்றைக்கு திருமணங்கள் ஒவ்வொரு கலாச்சாரத்தின் அடிப்படையில் நடக்கின்றன.

உலகத்தில் இன்றைக்கு எப்படி திருமண பந்தங்கள் இணைக்கப்படுகின்றன?

1) புருஷனும் ஸ்திரீயும் மூன்று முறை அக்கினையை சுற்றி வருவதின் மூலமாக திருமணம் செய்து கொள்ளுகிறார்கள் 
2) மஞ்சள் கயிறை புருஷன் ஸ்திரீக்கு கட்டுவதின் மூலம் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்
3) சில இடங்களில் கால் விரலில் வளையத்தை இருவரும் அணிவதின் மூலம் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்
4) மண மாலைகளை மாற்றிக் கொள்ளுவதின் மூலம் திருமணம் செய்கிறார்கள்
5) ஒருவிதமான கருப்பு கயிறை புருஷனானவன் ஸ்திரீக்கு அணிவிப்பதின் மூலம் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்

இப்படி பலவிதமான திருமண சடங்குகள் மூலம் உலகத்தார் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்

கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்?

1) புருஷனும் ஸ்திரீயும் மோதிரங்களை மாற்றிக் கொள்ளுவதின் மூலம் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்
2) புருஷனும் ஸ்திரீயும் வேதாகமத்தை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளுவதின் மூலம் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்
3) புருஷன் ஸ்திரீக்கு மாங்கல்யத்தை கட்டுவதின் மூலம் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்
4) மாலை மாற்றிக் கொள்ளுவதின் மூலம் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்
5) புருஷன் ஸ்திரீக்கு பொன்னினால் செய்யப்பட்ட செயினை அணிவிப்பதின் மூலமாக திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்

இப்படிப்பட்ட முறையில் தான் கிறிஸ்தவ திருமணங்கள் நடைபெறுகிறது 

ஆனால் தேவன் ஒரு புருஷனையும் ஸ்திரீயையும் விவாகத்தில் இணைக்கிறார் என்றால் எப்படி இணைக்கிறார்?

தேவன் புருஷனையும் ஸ்திரீயையும் திருமண உடன்படிக்கையின் மூலமாக தான் இணைக்கிறார்
மல் 2:14 ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.

புருஷனும் ஸ்திரீயும் அவர்கள் செய்யக்கூடிய திருமண உடன்படிக்கையின் மூலமாக தான் இணைக்கிறார்

உலகத்தில் வாழக்கூடியவர்கள் எல்லாரும் எந்த திருமண முறையிலும் திருமணம் செய்யலாம் ஆனால் அவர்கள் திருமண உடன்படிக்கை செய்யும் போது தான் அதில் தான் தேவன் அவர்களை இணைக்கிறார் அதற்கு தேவன் தான்  சாட்சியாக இருக்கிறார்
மல் 2:14 ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்;

திருமண உடன்படிக்கை இல்லையென்றால் அது திருமணமும் இல்லை அதை தேவன் இணைப்பதும் இல்லை

அந்த திருமண உடன்படிக்கை என்ன என்பதை வரும் இனி வரும் பாடங்களில் கற்றுக்கொள்வோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment