Friday, 20 March 2015

நம்முடைய இருதயம் என்ன நிலமாய் இருக்கிறது?




நம்முடைய இருதயத்தில் வசனம் விதைக்கப்படுகிறது ஆனால் அது கிரியை செய்கிறதா இல்லையா என்று இந்த உவமையை கொண்டு அறிந்து கொள்ளலாம்

மத்தேயு மாற்கு லூக்கா ஆகிய மூன்று சுவிசேஷப்புத்தகங்களில் இந்த உவமை எப்படி சொல்லப்பட்டு  இருக்கிறது என்பதை தெளிவாக கற்றுக் கொள்ளுவோம்
கீழே உள்ள இந்த உவமைக்கு கிறிஸ்துவே விளக்கம் கொடுக்கிறார், வசனங்களை மாத்திரம் தெளிவாக படியுங்கள் அப்போது தான் கிறிஸ்து ஒவ்வொரு நிலத்தைப் பற்றி என்ன சொன்னார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்

இந்த உவமையை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லை என்றால் சாத்தான் உங்கள் இருதயத்தில் விதைக்கப்பட்டதை பறித்துவிட்டான் என்று அர்த்தம்
Mat 13:3 அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
Mat 13:4 அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
Mat 13:5 சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.
Mat 13:6 வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.
Mat 13:7 சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
Mat 13:8 சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
Mat 13:9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

வழியருகே விதைக்கப்பட்டவர்கள்
Mat 13:19 ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
Mar 4:15 வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.
Luk 8:12 வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.

கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்
Mat 13:20 கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்;
Mat 13:21 ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.
Mar 4:16 அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,
Mar 4:17 தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.
Luk 8:13 கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்
Mat 13:22 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான்.
Mar 4:18 வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்.
Mar 4:19 இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.
Luk 8:14 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்
Mat 13:23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.
Mar 4:20 வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார்.
Luk 8:15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

  • நம்முடைய இருதயம் நல்ல நிலமாக இருக்கும் என்றால் தேவனுடைய வார்த்தைகளை  மாத்திரமே ஏற்றுக் கொண்டு உணர்ந்து கொண்டு அதற்கு கீழ்ப்படிந்து பொறுமையுடனே பலன் கொடுப்போம் 
  • மற்ற மூன்று நிலங்களும் எந்தவொரு பிரயோஜனத்தையும் தேவனுக்கு தரப்போவது இல்லை

நீங்கள் எந்த நிலமாய் இருக்கிறீர்கள்?
2Co 13:5 நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்....














No comments:

Post a Comment